ஈரான் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அங்கிருந்து தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம் என்ற தீவிர நெருக்கடி அதிகரித்துள்ளது. ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தங்களின் கொள்கைகளுக்கு ஈரான் கட்டுப்பட வேண்டும் என அமெரிக்கா அழுத்தமளித்து வருகிறது.
அத்துடன், ஈரானை கட்டுப்படுத்துவது, மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடான இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும் என்ற நோக்கமும் அமெரிக்கா தரப்பிற்கு உள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தைகளை முடக்கியுள்ள இஸ்ரேல் தற்போது தமக்கு சாதகமானக் கொள்கைகளை அமெரிக்கா ஊடாக ஈரானிடம் இருந்து சாதிக்க முயன்று வருகிறது.
பேச்சுவார்த்தைகளில் இதுவரை சாதகமான முன்னேற்றம் ஏற்படவில்லை. இருப்பினும், பேச்சுவார்த்தைகள் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக நடப்பதாக இரு தரப்பிலும் கூறப்பட்டது.ஆனால், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு, அமெரிக்கா தனது அதிகப்படியான கோரிக்கைகளை கைவிட வேண்டும் என ஜெனீவாவில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் என்ற முடிவுக்கு வந்துள்ள அமெரிக்கா, ஈரானின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறது. மேலும், இதுவரை இஸ்ரேல் கூறிவந்துள்ள குற்றச்சாட்டுகளையே தற்போது ட்ரம்பும் முன்வைத்துள்ளார்.
ஐரோப்பாவையும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை ஈரான் ஏற்கனவே உருவாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அவர்கள் விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் யுரேனியம் செறிவூட்டலைக் கைவிடுவதை நிராகரித்துள்ளதுஇ அதன் அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று வலியுறுத்துகிறது.இதனையடுத்து எப்போது வேண்டுமானாலும்இ, அமெரிக்கா தரப்பில் இருந்து தாக்குதல் முன்னெடுக்கலாம் என்ற நிலையில் ஈரானில் தங்களது தூதரக ஊழியர்களை தற்காலிகமாக வெளியேற்றியதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.















