2026 ஆம் ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் 13,590 டெங்கு நோயாளிகளும், அதனால் 4 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (03) நிலவரப்படி, இலங்கையில் மொத்தம் 13,943 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் 50.6% பேர் (7,055) மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் டெங்கு நோயாளிகளின் பரவல் அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு ஜனவரியில் 7,866 டெங்கு நோயாளிகளும், பெப்ரவரியில் 5,724 பேரும், மார்ச் மாதத்தின் முதல் மூன்று நாட்களில் 353 பேரும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.















