யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்(JSAC) யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உற்பத்தித் திறனையும், எமது மண்ணின் தொழில்முனைவோரின் பெருமிதத்தையும் பறைசாற்றும் வகையில் ‘யாழ் எழுச்சி 2026’ மக்கள் சந்தை நடைபெறவுள்ளது.
விவசாயம், கடற்றொழில் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களை தேசிய ரீதியிலான சந்தை வாய்ப்புகளுடன் இணைக்கும் இந்தத் தனித்துவமான நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் காலை 9:00 மணி முதல் நடைபெறவுள்ளது.
















