இலங்கை பொலிஸ் சேவையின் 162வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, விசேட நிகழ்வொன்று நாளை (21) நடைபெறவுள்ளது.
பம்பலப்பிட்டிய மேலதிக படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைவு சின்னத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் தலைமையில் இந்த உத்தியோகபூர்வ நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.













