இந்தியக் கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பரிவர்த்தனையில், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை, ஒரு பெரும் கூட்டமைப்பு 1.78 பில்லியன் அமெரிக்க டொலர் (₹16,660 கோடி ) என்ற பிரம்மாண்டமான தொகைக்கு வாங்கியுள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமம், அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய ஒரு வலுவான கூட்டமைப்பு இந்த உரிமையை வாங்கியுள்ளது.
வணிக மதிப்பு மற்றும் போட்டி வெற்றி ஆகிய இரண்டிலும் RCB தொடர்ந்து வளர்ந்து வருவதால், இந்த ஒப்பந்தம் IPL வரலாற்றில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது.
இந்த கையகப்படுத்தலானது ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு RCB அணிகளையும் உள்ளடக்கியது.
செவ்வாய்க்கிழமை (24) அறிவிக்கப்பட்ட இந்தக் கையகப்படுத்தல், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் இந்தியப் போட்டி ஆணையத்தின் முறையான ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
கடந்த சீசனில் தங்களது முதல் அடவருக்கான IPL கிண்ணத்தை வென்ற RCB, போட்டியின் வளர்ந்து வரும் வணிக ஈர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்த உலகளாவிய முதலீட்டாளர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது.
மேலும், இந்த ஆண்டு அவர்கள் தங்களது மகளிர் பிரீமியர் லீக் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றமையும் குறிப்பிடத்தக்கது.













