அன்றாடம் மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநரேம், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும், எரிசக்தி நெருக்கடி நிலவி வரும் நிலையிலும், மின்வெட்டு விதிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நேற்று (24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் குமார ஜெயகோடி மேலும் கூறியதாவது:
பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும், அன்றாட நடவடிக்கைகள் தடையின்றித் தொடர அனுமதிக்கும் வகையிலும் மின்சாரமும் எரிபொருளும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
ஒரு பிராந்தியமாக நாம் இதைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறோம் என்று நான் நம்புகிறேன், நாம் அவ்வாறே தொடர்ந்து செய்ய வேண்டும். எரிபொருள் கொள்முதல் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
பலர் பரிந்துரைத்த போதிலும், மின்வெட்டை விதிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நான் பொறுப்புடன் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
மே மாதம் வரை அனைத்து நுகர்வுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எங்களிடம் போதுமான எரிபொருள் உள்ளது, எனவே பீதியடையத் தேவையில்லை என்றார்.












