ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரரான மொஹமட் தாஹிர் அன்வர் பாகிஸ்தானில் காலமானார்.
அவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தாஹிர் அன்வர் ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார், மேலும் பல ஆண்டுகளாக அந்த அமைப்பின் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
அவரது மரணம் அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ அலைவரிசை மூலம் உறுதி செய்யப்பட்டது.
தாஹிர் அன்வரின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும், உடல்நலக்குறைவு குறித்தோ அல்லது குறிப்பிட்ட சம்பவம் குறித்தோ இதுவரை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ஷ்-இ-மொஹமட் ஒரு சாதாரண அமைப்பு அல்ல. 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளத் தாக்குதல், 19 வீரர்களைக் கொன்ற உரி தாக்குதல், மற்றும் 40 மத்திய ரிசர்வ் பொஸ் படை வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா தாக்குதல் உட்பட, இந்தியாவில் நடந்த பல பெரிய தாக்குதல்களுடன் இந்த அமைப்புக்குத் தொடர்பு உள்ளது.
















