விமான நிலையத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து அதிகரித்து வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், 10 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற ஹீத்ரோவின் முன்மொழிவை இங்கிலாந்தின் தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணத்தை 17 சதவீதம் உயர்த்தி 33.26 பவுண்டாக ஆக உயர்த்த ஹீத்ரோ முன்மொழிந்திருந்தது.
எனினும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பயணிக்கான சராசரிக் கட்டணம் 28.40 பவுண்ட்டுகளிலிருந்து 28.80 பவுண்டாக மாத்திரமே உயர்த்த வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று (31) தெரிவித்தது.
இதன் பொருள், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் திட்டத்தின் கீழ், விமான நிலையத்தின் மின்சார வலையமைப்பில் செய்யப்படும் மூலதன முதலீடு உட்பட அந்த இடத்தை மேம்படுத்துவதற்காக ஹீத்ரோவுக்கு 5.8 பில்லியன் பவுண்ட் மட்டுமே செலவிட அனுமதிக்கும்.
இதன் மூலம், ஹீத்ரோ விமான நிலையத்தின் கட்டண உயர்வு முன்மொழிவானது நிராகரிக்கப்பட்டது.













