செல்லுபடியாகும் பதிவு உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்ததற்காக மூன்று நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் குறித்த விசாரணையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் மீகஹாவத்தை மற்றும் கந்தானையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, அவர்களிடமிருந்து மூன்று கார்கள், இரண்டு ஜீப்புகள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 21, 39 மற்றும் 44 வயதுடைய நபர்கள், கந்தானை மற்றும் மீகஹாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













