தொழில்துறையிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததால், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக நேற்று வெளியான தற்காலிக அரசாங்கத் தரவுகள் காட்டின.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 367 மில்லியன் மெட்ரிக் தொன் கார்பன் டைஆக்சைடுக்கு சமமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது 2024-ஆம் ஆண்டை விட 7 மில்லியன் தொன் குறைவு என இங்கிலாந்தின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத் துறை தெரிவித்துள்ளது.
2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை பிரித்தானியா கொண்டுள்ளது.
இதற்கு புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பயன்பாட்டைப் பெருமளவில் அதிகரிப்பதும், மின்சார வாகனங்களுக்கு மாறுவதும் பிரதான விடயமாக உள்ளது.














