செம்மணி சிந்துப் பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி மரியநாயகம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஏற்கனவே யாழ்ப்பாண திறந்த நீதிமன்றத்தில் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.
இதன்படிவழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


















