ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டி ஏப்ரல் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் வித்தியானந்தக் கல்லூரியைச் சேர்ந்த 23 வயதுக்குட்பட்ட பிரிவில் நான்கு பழைய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் இரு மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
அதில் கி. சனுயா வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், ஜெ.வினோஜன் வெண்கலப் பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர்களின் இந்த சாதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வித்தியானந்தாக் கல்லூரிக்கும் அவர்களின் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.















