• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- CIDயில் முன்னிலையான நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) இன்றைய தினம் (10) சாட்சியமளித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய இன்றைய தினம் (10) காலை 9.30 மணியளவில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையான மன்னார் நகர சபையின் தவிசாளர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு சாட்சியமளிக்க என்னை இன்றைய தினம் (10) அழைப்பு விடுத்திருந்தனர்.

குறிப்பாக, 51 சைனா பஜார் (China Bazar) கடைகளை வழங்கியதில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

இதில் 49 கடைகள் முறையான கொள்வனவு நடைமுறை சட்டத்தை (சட்டம் 80:46) மீறி, எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு சுமார் 5 கோடி 31 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் பரிசீலித்த போது, ஊழல் நடை பெற்றுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் (General Auditor) அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காகவும், வாக்குமூலம் வழங்குவதற்காகவும் மீண்டும் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் அழைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு தேவையான சில மேலதிக ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

⁠மக்களின் பணம் திருடப்பட்டுள்ளது என்பது விசாரணைகள் மூலம் உறுதியாகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுக்கவும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பது எமது இலக்காகும்.என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

Next Post

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

Related Posts

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!
உலகம்

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2026-04-30
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!
இலங்கை

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!
இலங்கை

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!
இலங்கை

விளையாட்டில் அரசியலுக்கு இடமில்லை: எரானுக்கு எதிராக SJP நடவடிக்கை!

2026-04-30
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-04-30
Next Post
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

அரசு மருத்துவ அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நாளையுடன் நிறைவு!

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம்  முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

0
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

0
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

0
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

0
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

0
சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30

Recent News

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

2026-04-30
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.