மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் மார்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்













