• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

“மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்”: மன்னார் பதப்படுத்தும் நிலையத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார், சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் உடல் பதப்படுத்தும் நிலையத்தில் இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற மற்றும் சுகாதாரச் சீர்கேடான செயற்பாடுகள் தொடர்பாகப் பொலிஸார் மற்றும் நகரசபை இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், உடல்களைப் பதப்படுத்திய பின்னர் அகற்றப்படும் மனித எச்சங்கள் முறையற்ற விதத்தில் வீசப்படுவதாக நீண்டகாலமாகப் புகார்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், இன்று (19) காலை குறித்த நிலையத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் மனித உடற்பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்ற கொடூரக் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச மக்கள், “குடியிருப்புகள் மற்றும் இராணுவ முகாம் அமைந்துள்ள இப்பகுதியில், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

உடனடியாக இந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

தகவலறிந்த மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது குறித்து முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்:

“புகைப்படங்கள் மற்றும் நேரில் பார்த்த ஆதாரங்களின்படி, மனித உடற்பாகங்கள் மிகவும் அலட்சியமான முறையில் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டுள்ளன. இது ஒரு பாரிய சுகாதாரச் சீர்கேடு.”

“சுகாதார விதிகளை மீறிச் செயற்பட்ட இந்த நிலையத்தை உடனடியாக ‘சீல்’ வைத்து மூடுவதற்குப் பொதுச் சுகாதார அதிகாரிக்குக் கட்டளையிட்டுள்ளேன்.”

“உடல் உறுப்புகளைப் பொது மயானத்திலேயே புதைக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம்.

தற்போது நகரசபை சார்பில் மயானத்திற்கு அருகிலேயே நவீன வசதிகளுடன் கூடிய எம்பாமிங் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

பணிகள் முடிந்ததும் இனி அந்த இடத்தில் மாத்திரமே உடல் பதப்படுத்தும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மனிதாபிமானமற்ற முறையில் மனித எச்சங்களைக் கையாண்ட குறித்த தனியார் நிறுவனத்திற்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

 

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

Related Posts

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!
இலங்கை

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

2026-04-19
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

2026-04-19
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

2026-04-19
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!
இலங்கை

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

0
மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

0
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

0
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

0

2026-04-19
மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

2026-04-19
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

2026-04-19

Recent News

2026-04-19
மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

மட்டக்களப்பில் அதிரும் கொ*லைச் சம்பவங்கள்: 6 நாட்களில் 4 பேர் உயிரிழப்பு – 4 பேர் கைது!

2026-04-19
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல் குறித்து கூட்டு எதிர்க்கட்சி அறிக்கை வெளியீடு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

2026-04-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.