மாலைத்தீவு கடல் பகுதி வழியாகப் பயணிக்கும் இலங்கை பல நாள் மீன்பிடிப் படகுகள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறையை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டு, மீன்பிடி நடவடிக்கைகள் முடிந்ததும் கரைக்குத் திரும்பும் அனைத்து பல்நோக்கு மீன்பிடிக் கப்பல்களும், மாலைத்தீவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தைக் கடந்து செல்லும்போது இந்த நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
அந்த அறிவிப்புக்கு இணங்க, மாலைத்தீவு அரசாங்கத்தின் சட்டங்களை மீறி அதன் கடல் எல்லைக்குள் நுழையும் கப்பல்கள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவற்றை விடுவிக்க மாலைத்தீவு அதிகாரிகள் பெரும் அபராதம் விதிப்பார்கள்.
இக்காரணத்தால், இதுபோன்ற சட்ட வழக்குகளில் எந்தச் சூழ்நிலையிலும் தலையிடவோ அல்லது ஆஜராகவோ திணைக்களத்துக்கு உரிமை இல்லை.
அதன்படி, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் நுழைவதற்கு குறைந்தது 96 மணி நேரத்திற்கு முன்பாக, தேவையான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து உரிய மின்னஞ்சல் முகவரிகளுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் படகின் பதிவுச் சான்றிதழ், புறப்பாடு சீட்டு, பணியாளர் விவரங்கள், படகின் புகைப்படம் மற்றும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைக் காட்டும் தோராயமான வரைபடம் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இந்த விதிகளை மீறுவதால் ஏற்படும் நிதி மற்றும் தொழில்ரீதியான இழப்புகளைத் தவிர்க்க அனைத்துக் கப்பல் உரிமையாளர்களும் மீனவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுசந்த கஹவத்த சுட்டிக்காட்டினார்.











