நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று காலை 7 .00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் காலை 11.00 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.

















