தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் வருமென்று முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று காலை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளரிடம் இவ்வாறு கூறியுள்ளார்
தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும் என்று முழுமையாக நான் நம்புகின்றேன். மனசாட்சிப்படி சரியான முறையில் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். என்றும் 84 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















