இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (15) மாத்திரம் மொத்தம் 1,195 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 17,051 டெங்கு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மேல் மாகாணத்தில் மொத்தம் 38,160 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தென் மாகாணத்தில் 11,274 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 6,073 பேரும், மத்திய மாகாணத்தில் 6,026 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,082 டெங்கு நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 பேரும் பதிவாகியுள்ளனர்.
டெங்கு தொற்று காரணமாக இதுவரை 49 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.













