திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது.
ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆளுநர் மாளிகையின் செயலாளர் மூலமாக் அந்த கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் கொடுக்கப்பட உள்ளது.
இந்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் ஆளுநர், தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது.
இதையடுத்து தவெக ஆட்சி அமைக்கும்.
குறிப்பாக, பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 10 இடங்கள் தேவை எனும் நிலை உள்ளது.
இதற்காக, விரைவில் சட்டமன்றத்தை கூட்டி தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதற்காக கம்யூனிஸ்டு கட்சிகள், மற்றும் பிற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.















