அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசு புலனாய்வு சேவையும் அசர்பைஜான் புலனாய்வுச் சேவையான அரச பாதுகாப்பு சேவையும் (State Security Service of Azerbaijan) இணைந்து அண்மையில் அசர்பைஜானில் மேற்கொண்ட ஒன்றிணைந்த நடவடிக்கையின் ஊடாக, இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “பட்டுவத்தே சாமர” என்ற பெயரில் அறியப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இராஜதந்திர ஒத்துழைப்பின் மூலம், குறித்த சந்தேகநபர் 2026.05.10 அன்று குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் குழுவால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபர் 48 வயதுடைய ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:
- கணேமுல்ல சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய திட்டமிடப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்து போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தது.
- 2020.12.06 அன்று சுங்க அதிகாரிகள் கைப்பற்றிய 100 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப்பொருள் சம்பவத்தில், அந்த போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் சந்தேகநபர்களை துபாயிலிருந்து இயக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
- 2023.12.31 அன்று கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இவர் திட்டமிட்டு இயக்கியதாகவும், அது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மோதலின் விளைவாக இடம்பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 2024.07.25 அன்று கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரும் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் இவர் திட்டமிட்டு இயக்கியதாகக் கூறப்படுகிறது.
- 2024.12.13 அன்று கந்தானை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு திட்டமிடப்பட்ட குற்றவாளியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம், இவரின் ஆதரவாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சந்தேகநபருக்கு 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.














