• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசேட மனு ஒன்றின் மூலம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேரில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

பிரதிவாதிக்கு அவசர வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு நியாயங்களையும் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, முன்வைக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரின் வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாகத் தளர்த்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.

அக்காலப்பகுதியில், ஊவா மாகாண சபைக்காக எழுதப்பட்ட உத்தியோகபூர்வ காசோலை (Cheque) ஒன்றை, மாகாண சபைக் கணக்கில் வைப்புச் செய்யாமல், முறைகேடான வகையில் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டது.

அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்து பாரிய ஊழல் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற இந்த அடிப்படையிலேயே, அவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டு, வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: chamara sampath dasanayakkaCourt ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

Related Posts

2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்
இந்தியா

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18
மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!
இலங்கை

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வு!

2026-05-18
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!
இலங்கை

5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!

2026-05-18
Next Post
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

0
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

0
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

0
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

2026-05-18

Recent News

2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

2026-05-18

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

2026-05-18
மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.