வட அயர்லாந்தின் முக்கிய வர்த்தக நுழைவாயிலாக விளங்கும் பெல்பாஸ்ட் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 25 ஆண்டுகளில் 1.3 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அதன் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
துறைமுகத்தின் தற்போதைய வர்த்தகக் கொள்ளளவு ஆண்டுக்கு 24 மில்லியன் டன்களாகக் காணப்படும் நிலையில், புதிய மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் இது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக, உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக வளர்ச்சியைத் தடையின்றி கையாள்வதற்கு தற்போது துறைமுகத்தை நவீனமயமாக்குவது அத்தியாவசியமானது என பெல்பாஸ்ட் ஹார்பர் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.













