லீக் சுற்று முடிவடைந்து 2026 இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதி வாரத்தில் நாம் நுழைந்துள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுப் போட்டிகள் இன்று (26) தொடங்கவுள்ளன.
லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தர்மசாலாவில் இன்றிரவு நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் மோதவுள்ளன.
சீசனின் முதல் பாதியில் RCB மற்றும் GT அணிகள் முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்திறனை வெளிப்படுத்தின.
நடப்பு சாம்பியனான RCB, சீசனின் முதல் எட்டு ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெற்று, சீசன் முழுவதும் பிளேஆஃப் சுற்றுக்கான தகுதிப் பகுதியில் தங்களைத் தக்கவைத்துக் கொண்டதுடன், இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். சீசனில் மிகவும் நிலையான அணியாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது.
இதற்கிடையில், லீக் சுற்றின் பாதி வழியில் ஏழு ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்திருந்த GT, பின்னர் தங்களின் அடுத்த ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதன் நன்மை என்னவென்றால், தகுதிச்சுற்று 1-ல் தோல்வி அடைந்த அணி, தகுதிச்சுற்று 2-ல் (மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளைக் கொண்ட வெளியேற்றுச் சுற்று) வெற்றியாளரை எதிர்கொள்வதன் மூலம் இறுதிப் போட்டிக்குச் செல்ல மற்றொரு வாய்ப்பைப் பெறுகிறது.
எனவே, இறுதிப் போட்டியிலும் இந்த இரு அணிகளும் மோதினால் அது ஆச்சரியமாக இருக்காது.
எனினும், தங்களது கடைசி 10 ஆட்டங்களில் எட்டில் வெற்றி பெற்று, RCB மற்றும் GT அணிகளுடன் 18 புள்ளிகளில் சமநிலையில் இருந்தும், நிகர ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து இரு அணிகளும் எச்சரிக்கையாக இருக்கும்.

















