யாழ். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குப் படகு மூலம் பயணிக்கவிருந்த 26 பயணிகள், தங்கம் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (17) SG423 என்ற படகு புறப்படுவதற்கு முன்னரே கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், 17 இந்தியர்கள், மூன்று இலங்கை ஆண்கள் மற்றும் ஆறு இலங்கை பெண்கள் அடங்கிய பயணிகள் குழுவினர் தடுத்து வைக்கப்பட்டதாகச் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்கத் துறையினரின் சோதனையின்போது, பயணிகளில் இருவரிடம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த 26 பேரும் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.













