2026 ஆம் ஆண்டு போட்டிக்குப் பின்னர் ஆடவர் கால்பந்து உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 64-ஆக அதிகரிப்பது குறித்து ஃபிஃபா (FIFA) கவனம் செலுத்தி உள்ளது.
கால்பந்தின் மிகப்பெரிய நிகழ்வில் விளையாடுவதற்கான கனவைக் காண ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கும் நோக்குடன் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார்.
64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம் குறித்த யோசனை முதன்முதலில் 2025 மார்ச் மாதத்தில் உருவானது.
அப்போது, இப்போட்டியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் அமையவுள்ள 2030-ஆம் ஆண்டுக்கான தொடரை விரிவுபடுத்த தென் அமெரிக்கக் கூட்டமைப்பான ‘கான்மெபோல்’ (CONMEBOL) முன்மொழிந்தது.
இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், 64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 128 போட்டிகள் நடைபெறும்.
இது 1998 முதல் 2022 வரை பின்பற்றப்பட்ட 32 அணிகள் கொண்ட முறையை விட இருமடங்கு அதிகமான போட்டிகளைக் கொண்டதாகும்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2026 உலகக் கிண்ணப் போட்டியானது, அணிகளின் எண்ணிக்கையை 32-லிருந்து 48-ஆக உயர்த்திய பின்னர் நடைபெறும் முதல் போட்டியாகும்.
இந்தப் போட்டியில் மொத்தம் 104 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.













