இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அளவிலான நிகழ்வாக அமைந்த 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத் தொடர், இப்போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத்தொகையைக் கொண்டிருந்தது;
இதில் பங்கேற்ற 48 அணிகளுக்கும் அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் பரிசுத்தொகையாக 655 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஃபிஃபா ஒதுக்கியிருந்தது.
தகுதி பெற்ற ஒவ்வொரு நாட்டிற்கும் தகுதி மற்றும் போட்டிக்கான ஆயத்தப் பணிகளுக்கான கூடுதல் நிதியும் வழங்கப்பட்டதால், நிதி ரீதியாக இதுவே மிகச் சிறந்த பலனைத் தந்த உலகக் கிண்ணத் தொடராகவும் அமைந்தது.
நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் (MetLife Stadium) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்ன் அணிக்கு, 50 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
கட்டாரில்2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்றபோது அர்ஜென்டினா பெற்ற தொகையை விட இது 8 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும்.
ஃபிஃபா அமைப்பு பரிசுத்தொகையை அந்தந்த கால்பந்து சங்கங்களிடமே வழங்கினாலும், அத்தொகையை வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை அந்தந்த சங்கங்களே தீர்மானிக்கின்றன.
இறுதிப் போட்டியில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த ஆர்ஜென்டினா அணி, 33 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெற்றது.
பிரான்ஸை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணி 29 மில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றது.
அதேவேளையில், நான்காம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்தன.
மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களுக்கு இடையிலான பரிசுத்தொகை வித்தியாசம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்த நிலையில், 1966-க்குப் பிறகு உலகக் கிண்ணத்தில் தாங்கள் பதிவு செய்த மிகச் சிறந்த செயல்பாட்டைக் கொண்டாடுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இது மற்றொரு காரணமாக அமைந்தது.
இது தவிர ஒவ்வொரு அணியும் எட்டிய நிலையின் அடிப்படையில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
காலிறுதியில் வெளியேறிய நாடுகள் (5 முதல் 8-வது இடங்கள்) ஒவ்வொன்றும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றன.
‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றில் (9 முதல் 16-வது இடங்கள்) வெளியேறிய அணிகள் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ‘ரவுண்ட் ஆஃப் 32’ சுற்றில் (17 முதல் 32-வது இடங்கள்) வெளியேறிய அணிகள் தலா 11 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றன.
குழு நிலையைக் கடக்கத் தவறிய 16 அணிகள் கூட 9 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றன.
இதன் மூலம், இத்தொடரிலிருந்து வெளியேறிய ஒவ்வொரு நாடும் குறிப்பிடத்தக்க அளவிலான நிதியுதவியைப் பெற்றுச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
அணிகளுக்கான பரிசுகளைத் தவிர, போட்டியின் சிறந்த வீரர்களை ஃபிஃபா தனது தனிநபர் விருதுகள் மூலமாகவும் அங்கீகரித்தது.
ஸ்பெய்ன் நடுக்கள வீரர் ரோட்ரி போட்டியின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்தை வென்றார், அதே நேரத்தில் லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பந்துகளை வென்றனர்.
10 கோல்களுடன் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்ந்த எம்பாப்பே, கோல்டன் பூட் விருதையும் வென்றார்.
ஸ்பெய்ன் கோல்கீப்பர் உனை சைமன் கோல்டன் க்ளோவ் விருதையும், இளம் தடுப்பாட்ட வீரர் பாவ் குபார்சி சிறந்த இளம் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சாதனை அளவிலான பரிசுத் தொகையுடன் சேர்த்து, இந்த விருதுகள் வட அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற ஒரு மறக்க முடியாத உலகக் கிண்ணத்தை நிறைவு செய்தன.

















