ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக, அரச புலனாய்வுதுறையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைக்கால மனுக்கள், இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
விசாரணையின் போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பல வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதன்படி, இடைக்கால மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இந்த மாதத்தின் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.















