இருவர் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமிந்த விஜேசிறிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அக்குற்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

















