சீனா மற்றும் இந்தியா இடையே நிலவும் எல்லை விவகாரத்திற்கு நியாயமான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காண்பது குறித்து பீஜிங்கில் உயர்மட்டத் தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சீன வெளியுறவு அமைச்சர் வங் யீ (Wang Yi) மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், எல்லைப் பிரச்சினைகளைக் கடந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் தொடர்ந்தும் அமைதியைப் பேணுவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்ட எல்லைப் பேச்சுவார்த்தையை வரும் 2027 ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.














