கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளில் இலங்கை அணியின் சோனல் தினுஷ யாரும் எதிர்பாராத ஒரு சாதனையைப் படைத்தார்.
அவரது துடுப்பாட்டம் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இலங்கைக்கு உதவியது மட்டுமின்றி, இந்தியாவின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்விக் குறியாக்கினார்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த தினுஷ, இலங்கை அணி ‘ஃபோலோ-வன்’ (follow-on) பெற்ற நிலையில், மீண்டும் ஒரு சதத்தை இன்று நிறைவு செய்தார்.
இடது கை துடுப்பாட்ட வீரரான தினுஷ போட்டியின் ஐந்தாம் நாளில், இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது 197 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்து அந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தத் தொடரில் அவர் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.
இந்தச் சாதனையின் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் மூன்று சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்களின் உயர்தரப் பட்டியலில் தினுஷ இணைந்தார்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் அரவிந்த டி சில்வா, தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் ஹஷிம் அம்லா, இலங்கையின் குமார் சங்கக்காரா, பாகிஸ்தானின் யூனிஸ் கான், அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினுஷ இந்த சாதனையை எட்டிய ஒன்பதாவது வீரராகவும், அரவிந்த டி சில்வா மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருக்குப் பிறகு மூன்றாவது இலங்கை வீரராகவும் ஆனார்.















