• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

1.249 Views
4 years ago
87 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Yuganthini Yuganthini
    0 Subscriber

    இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின்,  பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

    நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அருணாசலம் வேழமாலிகிதன் மேலும் கூறியுள்ளதாவது,  “கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் அமைந்திருக்கக்கூடிய இரணைமடு சந்தியை மையமாக வைத்து, இராணுவத்தினரால் பாரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

    குறித்த வளைவை இடைநிறுத்தி, உரிய அனுமதியின் பிரகாரம் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  சம்மந்தப்பட்ட தரப்பிற்கு பல தடவை தெரிவித்துள்ளோம்.

    ஆனால், இதுவரை காலமும் எந்ததொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதமையினால், இந்த விடயம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, சபையினுடைய 52வது பிரிவு அறிவுறுத்தலிற்கு அமைவாக அவற்றை இல்லாது செய்து விடுவதற்கு அல்லது நீதிமன்றத்தினை நாடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

    கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்படுகின்ற வளைவுகள் மற்றும் சின்னங்கள் நகர ஆக்கத்திற்கு உதவக்கூடிய வகையிலே பொருத்தமானவகையில் அமைப்பதற்கான அனுமதிகள் துறைசார்ந்த திணைக்களங்களுடன் இணைந்ததாக வழங்கப்பட வேண்டும் என எங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

    இந்த நிலையில் இரணைமடு சந்தியில் இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களினால் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    ஆகவே, இந்த விடயம் தொடர்பில்,  நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நாங்கள் அந்த கட்டடத்திலே ஒட்டியுள்ளோம்.

    இவ்வாறு எழுத்து மூலமாக நகர்த்தல்களை செய்து கொண்டிருந்த வேளையில், பயணத்தடை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பிரதேச சபையில் ஏற்பட்ட எதிர்பாராத கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அலுவலக பணிகளை நாங்கள் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

    இந்த இடைநிறுத்தப்பட்ட காலத்தினை பயன்படுத்தி இராணுவத்தினர், குறித்த பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, இந்த பணிகளை உடனே நிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி இராணுவத்தினர் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Related

    Category: இலங்கை கிளிநொச்சி பிரதான செய்திகள் வட மாகாணம்
    Tags: அருணாசலம் வேழமாலிகிதன்இரணைமடு
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!
    முல்லைத்தீவு

    ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலத்தின் போக்குவரத்து படகு மூலம் இலவசமாக இடம்பெறுகின்றது!

    2025-12-02
    யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்
    ஆசிரியர் தெரிவு

    யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்

    2025-12-02
    வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!
    உலகம்

    வர்த்தக கொந்தளிப்புக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சீனா பயணம்!

    2025-12-02
    திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!
    இலங்கை

    திருகோணமலை சீனக்குடா துப்பாக்கிச்சூடு – கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு!

    2025-12-02
    திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!
    கிழக்கு மாகாணம்

    திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை!

    2025-12-02
    யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!
    இலங்கை

    யாழ் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் கொலை – சந்தேகநபர்கள் 6 பேர் கைது!

    2025-12-02
    Next Post
    கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் கால எல்லையில் மாறுப்பாடு இல்லை – மத்திய அரசு

    கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் கால எல்லையில் மாறுப்பாடு இல்லை – மத்திய அரசு

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.