• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வட மாகாணத்தில் பைசர் தடுப்பூசியை செலுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்தியாவைச் சீண்டுவதற்கு சீனா இலங்கையைப் பாவிக்கக்கூடாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/23
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
75 0
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்பொழுது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகத்தின் பொலிஸ்காரனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் சீனா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அதற்காக ஒரே பாதை ஒரே பட்டி, பட்டுப்பாதை போன்ற திட்டங்களை மிகப் பெரும் முதலீட்டில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தென்சீனக் கடற்பகுதியில் இருக்கும் மண் திட்டுக்களை தனது இராணுவ, விமானப்படை தளங்களாகவும் மாற்றி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

அதைப்போலவே இந்துசமுத்திர பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரே பாதை, ஒரேபட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொள்ளவும் இந்துசமுத்திர பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடந்த காலகட்டத்தில் நாங்கள் சீனாவுடன் பேசியபொழுது, ‘நாங்கள் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வைத்துக்கொள்வோமே தவிர, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம்’ என்று கூறினார்கள்.

அதுமாத்திரமல்லாமல், தமிழ் மக்கள் யுத்த குற்றங்களுக்கும் இனப் படுகொலைக்கும் எதிராக உலக நாடுகளிடம் நீதி கேட்டு சர்வதேச மன்றங்களை அணுகியபோது, அங்கும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அவர்களது கோரிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டு இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்தார்கள்.

இப்பொழுது, தமிழ் மக்கள்மேல் பரிவுகொண்டவர்கள் போல் நடித்து, மீனவர்களுக்கு உதவி செய்கின்ற போர்வையில், ஒரு தொகுதி வலைகளையும் உலர் உணவுகளையும் கொடுத்த நாடகத்தையும் நாங்கள் அண்மையில் பார்த்தோம்.

வடக்கு மாகாணத்தில் அவர்களது பிரசன்னம் என்பது இந்தியாவைச் சீண்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.

யுத்த காலத்தில் மிக அதிகளவிலான இராணுவ தளபாடங்களையும் விமானங்களையும் கொடுத்து இலங்கையை தனது பெருங்கடன்கார நாடாக்கிய பெருமை சீனாவையே சாரும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கு அதிக அளவு முதலீடுகளைச் செய்து, தானே முன்னின்று கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டது. வர்த்தக ரீதியில் எத்தகைய இலாபமுமற்ற இந்த முதலீடுகளால் இலங்கையை மேலும் மேலும் கடனாளியாக்கிவிட்டு, சீனா அத்துறைமுகத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.

இதனைப் போலவே மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுகம் போன்றவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளினாலும் சீனாவே அதிகளவில் பயனடைகின்றது.

இவ்வாறு இலங்கைக்கு பல பில்லியன் ரூபாக்களைக் கடனாகக் கொடுத்து அதை கடனாளியாக்கிவிட்டு முழு இலங்கையையுமே கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியிருக்கிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீன தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சீன உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தன்னை இறைமை மிக்க நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கை, இப்படி சீனாவின் சகல நடவடிக்கைகளுக்கும் முகம்சுழிக்காமல் ஆதரவு தெரிவித்து வருகின்றது.

இத்துடன் நிற்காமல், வடக்கு மாகாணத்தை தனது டிராகன் பிடிக்குள் கொண்டுவரும் நோக்குடன், நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்ற இடங்களில் மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் சீனா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இத்துடன் கடல்சார்துறைகளிலும் தனது நாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றது.

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணம் என்பது இந்தியாவிற்கு கூப்பிடுதொலைவிலுள்ள ஒரு பிரதேசம். இங்கு சீனர்களின் பிரசன்னம் என்பதோ, முதலீடுகள் என்பதோ இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகங்களை ஏற்படுத்தும் என்பது சாதாரண ஒரு அரசியல் மாணவனும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வடமாகாணத்தில் ஏற்படுத்தப்படும் முதலீடுகளுக்கு இலங்கை சீனாவிற்கு இடமளிப்பதென்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கலாசார ரீதியக, மொழி ரீதியாக, சமய ரீதியாக பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புடையவர்கள் இலங்கை, இந்திய மக்கள்.

குறிப்பாக எமக்கு மிகவும் அண்மித்த பிரதேசமான தமிழகத்தில் எட்டுகோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆகவே இந்தியாவிற்கு எதிராக வடக்கு மாகாண மண்ணை சீனா போன்ற நாடுகள் பாவிப்பதற்கு எந்தவிதத்திலும் அனுமதி அளிக்க முடியாது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், வடக்கு -கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையிலும், வடக்கு கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலும் உற்பத்திசார் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு இந்தியா முதலீடுகளையும் வழிகாட்டுதல்களையும் மேற்கொள்ள வேண்டும். அதுமாத்திரமல்லாமல், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வடிகால் அமைப்பு போன்ற விடயங்களில் தன்னிறைவடைவதற்கும் இந்தியா உதவ முன்வரவேண்டும்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள சீனாவை இலங்கைக்குள் உள்நுழைய விட்டு எதிர்காலத்தில் தேவையற்ற சச்சரவுகளை அண்டை நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளாமல், இலங்கையில் ஏற்படுகின்ற எத்தகைய அனர்த்தங்களிலும் உடனடியாக உதவுகின்ற, எமக்கு அருகில் உள்ள விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் அறிவுசார் துறைகளில் பாண்டித்தியம் பெற்ற இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்வதே இந்த நாட்டின் நலன்களுக்கு சிறப்பானதாகும் என்பதையும் இலங்கை அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உலக நாடுகளின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை நிராகரித்துக்கொண்டு, தனது நாட்டில் வாழுகின்ற இஸ்லாமிய சமூகத்தினரின் மனித உரிமைகள் அனைத்தும் மறுதலிக்கப்பட்டு அடிமைகளைவிடவும் கேவலமாக நடாத்திக்கொண்டும் வறுமைப்பட்ட நாடுகளைக் கடனாளிகளாக்கி தமது கைப்பிடிக்குள் கொண்டுவரும் கேவலமான கொள்கையையும் கைவிட்டு அதன் பிறகு ஏனைய நாட்டு மக்கள்மீது அக்கறை செலுத்துவது குறித்து சீனா சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிசீனாசுரேஷ் பிரேமச்சந்திரன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் மஹிந்த தனிப்பட்ட விஜயமாக இந்தியாவிற்கு பயணம்!

Next Post

புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு எதிராக முறைப்பாடு – தோட்ட  நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

Related Posts

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !
இலங்கை

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

2025-12-04
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!
இலங்கை

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

2025-12-04
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!
இலங்கை

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2025-12-04
நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய  விமானம் நாட்டை வந்தடைந்தது!
இலங்கை

நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-04
“இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வரும் ஜீவன் தொண்டமான்!”
இலங்கை

“இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வரும் ஜீவன் தொண்டமான்!”

2025-12-04
Next Post
புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு எதிராக முறைப்பாடு – தோட்ட  நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு எதிராக முறைப்பாடு - தோட்ட  நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு – முல்லையில் டக்ளஸ் வழங்கி வைத்தார்!

கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு - முல்லையில் டக்ளஸ் வழங்கி வைத்தார்!

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்து!

இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

0
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

0
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

0
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

0
நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய  விமானம் நாட்டை வந்தடைந்தது!

நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய விமானம் நாட்டை வந்தடைந்தது!

0
மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

2025-12-04
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

2025-12-04
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2025-12-04
நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய  விமானம் நாட்டை வந்தடைந்தது!

நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது இந்திய விமானம் நாட்டை வந்தடைந்தது!

2025-12-04

Recent News

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

மேலும் ஒரு தொகை அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் !

2025-12-04
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

வானிலை குறித்த முன்னறிவிப்பு!

2025-12-04
உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு , ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி!

2025-12-04
கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை  குறித்து தரப்பினர் விளக்கம்!

கோப்பாய் – நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை குறித்து தரப்பினர் விளக்கம்!

2025-12-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.