• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
எதிர்வரும் சில நாட்களுக்கு மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

கடும் மின்சார நெருக்கடி – 12 மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/30
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
83 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “12 மணி நேர மின் துண்டிப்பினை அமுல்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை.

நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் கப்பலொன்று நாட்டை வந்தடைந்தது. ஆனால் அந்த கப்பலை விடுவிப்பதற்கான டொலர் தற்போது இல்லை.

எனவே, அரச நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறைமை ஏற்படுத்தி, இந்த நிலைமையை ஓரளவுக்கு முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

10 மணிநேர மின்சாரத்தடை எனும்போது, மதிய நேரத்தில் முழுமையாக மின்சாரம் இல்லை. இதேநேரம் இந்திய கடன் வசதி எல்லையில், எதிர்வரும் 31 ஆம் திகதியே மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

முதலாம் திகதி தான் அந்தக் கப்பலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அடுத்து வரும் சில நாட்களில் மிகவும் சிக்கலான நிலையிலேயே அனைவருக்கும் வாழவேண்டி ஏற்படும்.

கூடிய அளவில் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு மாத்திரமே மின்சாரத்தை விநியோகிக்ககூடிய இயலுமை உள்ளது.

அதேநேரம், சுதந்திர வர்த்தக வளையத்திற்கு மின்சாரத்தை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால், மீண்டும் மழையுடனான காலநிலை ஏற்படும் வரையில், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்து, முழுமையாக மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இல்லை.

இந்த நிலையில், அடுத்துவரும் 2, 3 ஆண்டுகளுக்குள் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்காவிட்டால், இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுமின்சார நெருக்கடிமின்சாரத்தடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றும் மோடி!

Next Post

எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும் வல்லமை கொண்ட அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்!

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
Next Post
எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும் வல்லமை கொண்ட  அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்!

எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும் வல்லமை கொண்ட அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்!

சில வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம், புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

சில வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம், புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்தியது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை!

மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்தியது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.