• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நடேசனின் வீட்டில் சஜித்தின் தாயார் யாரை சந்தித்தார்? – மொஹமட் முஸம்மில் கேள்வி

அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது – சஜித்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/05/01
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
70 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள், வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வோர் ஆண்டும் மே 1ஆம் திகதி கொண்டாடுகிறார்கள்.

1886ஆம் ஆண்டு எட்டு மணி நேர வேலை நாள் கோரி, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சிகாகோ நகர தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டத்தின் நினைவாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதோடு, அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளினை இலங்கை உழைக்கும் மக்களும் நினைவுகூருகிறார்கள்.

ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இதுவாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடியை தேசிய வளங்களை விற்று மூடி மறைக்கும் சிறுபிள்ளைத்தனமான, சாத்தியமற்ற, நிலைபேறற்ற தீர்வினை கையாள்வதில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோடு, நாடு தனது சகல தேசிய வளங்களையும் இழந்த பாலைவன நிலத்தை மட்டுமே இதனால் மீதப்படுத்தும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றதன் மூலம் எமது நாடு வரலாற்று ரீதியிலான பின்னடைவைச் சந்தித்ததோடு, தற்போதைய நிர்வாகத்தின் மூலம் அந்த தோல்வியுற்ற பயணம் மிகவும் வெற்றிகரமாக முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அதேசமயம் சீர்செய்யப்படுவதாக காண்பிக்கும் உண்மை நிலையை கூறுவதை விட பயங்கரமானது என்பதோடு, பாரியதொரு ஆபத்து நம் முன்னே தோன்றியவாறுள்ளது.

மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் கடுமையான படுகுழியில் விழுந்துகொண்டிருப்பதோடு, ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர்.

வேலையின் கண்ணியத்தை முற்றிலுமாக ஒழித்து அவர்களை அவமதிக்கும் நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது.

பல ஆண்டுகளாக சம்பள அதிகரிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு அரசியல் பழிவாங்கல்கள் சக்திவாய்ந்ததொரு அடக்குமுறை சூழ்நிலையாக வளர்ந்துள்ளது.

நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவினங்கள் 40 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டமாகும்.

85 வீத மக்கள் கடன் வாங்குவது, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான செலவினங்களை குறைப்பது, சேமிப்புச் செலவுகள், சுமார் 68 வீத மக்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்தல், உணவின் எண்ணிக்கை மற்றும் உணவு வேளைகளை குறைத்தல் போன்ற துயரங்களையும் சந்தித்து வருகின்றனர்.

சனத்தொகையில் 14.3 வீதமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற நிலையில், பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என மத்திய வங்கி கணிப்புகள் எதிர்வுகூறியுள்ளன.

எல்லா எதிர்பார்ப்புகளும் தொலைந்து, புன்னகைக்கு பதிலாக கண்ணீரும், ஜனநாயகத்துக்குப் பதிலாக அச்சுறுத்தலும், அடக்குமுறையும் மக்கள் மீது அரசாங்கம் திணித்துவரும் சூழ்நிலையில்தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதோடு, இந்நிலையை மாற்றி, மனித சுதந்திரத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும் நிலைநிறுத்த, நிலைபேறான வேலைத்திட்டம் கொண்ட குழுவினால் மட்டுமே முடியும் என்பது இன்று நன்றாகவே நிரூபணமாகியுள்ளது.

தோல்வியுற்ற முதலாளித்துவம் அல்லது காலாவதியான சோசலிசத்தில் இருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பது யதார்த்தமாவதோடு, முற்போக்குத் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நடுநிலையானதொரு பாதையால் மட்டுமே இதை மேற்கொள்ள முடியும்.

பயங்கரவாதம் இல்லாத உன்னத நாடாக நமது நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ளும் ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என்பதோடு, இதன் நம்பகமான வேலைத்திட்டத்துடன் ஒரு வலுவான முகாமை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என தேசத்தின் சகல உழைக்கும் மக்களையும் மரியாதையுடனும் அபிமானத்துடனும் அழைக்கிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: அரசியல் பழிவாங்கல்சர்வதேச தொழிலாளர் தினம்சஜித் பிரேமதாஸ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உழைக்கும் மக்களின் உரிமைகளை அரசாங்கம் புறக்கணிக்காது – பிரதமர்!

Next Post

யாழில் மே தின ஊர்வலம்

Related Posts

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!
இலங்கை

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
இலங்கை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-12-02
இந்திய கடற்படையின் மகத்தான உதவி!
ஆசிரியர் தெரிவு

பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகளின் பட்டியல்!

2025-12-02
எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி
இலங்கை

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

2025-12-02
Next Post
யாழில் மே தின ஊர்வலம்

யாழில் மே தின ஊர்வலம்

சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல் !!

சூடானில் மக்களின் நிலவரங்களை ஆராயுமாறும் ஐ.நா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல் !!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

0
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

0
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

0
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

0
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2025-12-02

Recent News

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

கொத்மலை பகுதியில் சிக்குண்ட வெளிநாட்டவர்களை மீட்ட இந்திய விமானப்படை!

2025-12-02
பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முக்கிய அறிவிப்பு!

2025-12-02
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 89 பேர் உயிரிழப்பு!

2025-12-02
இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

இங்கிலாந்தில் 1989 மைதானத்தில் விளையாட்டு போட்டியொன்றின்போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!

2025-12-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.