• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக 11ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து கட்சி கூட்டம் – ஜனாதிபதி உறுதி

13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது : ஜனாதிபதி ரணில்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/08/09
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டபோது சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“13 ஆவது திருத்தச்சட்டமானது 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

எனினும், இதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் முன்னேறி செல்ல வேண்டுமெனில், இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இதற்காக நாடாளுமன்றில் நாம் அனைவரும் ஆழமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டால் மட்டுமே ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

சர்வக்கட்சி மாநாட்டின்போது, அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாக ஆராயப்பட்டது. எனினும், இதற்கு சில அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.

இதனை சில கட்சிகள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமெனில், முதலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

கடந்த 36 வருடங்களாக மாகாணசபை முறைமையினால் ஏற்பட்டுள்ள வெற்றி – தோல்வி குறித்து நாம் ஆராய வேண்டும்.

சீனா, இந்தியா, கனடா போன்ற நாடுகள் அதிகாரங்களை பகிர்ந்துள்ளன. நெதர்லாந்து, ஜப்பான் போன்ற சிறிய நாடுகளும் அதிகாரங்களை பகிர்ந்துள்ளன.

இவ்வாறு உலகின் பல நாடுகள் சர்வதேச கொள்கையின் கீழ், அதிகாரங்களை பகிர்ந்துள்ளன. இவற்றிலிருந்து நாம் பாடத்தை கற்க வேண்டும்.

550 பில்லியனை நாம் வருடத்திற்கு மாகாணசபைக்காக செலவு செய்கிறோம். அதாவது ஒரு நபருக்கு 22 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்.

இவ்வாறு செலவு செய்யும் பணத்திற்கு ஏற்ப நன்மைகள் எமக்கு கிடைக்கிறதா?

மாகாணசபை முறைமையை இல்லாது செய்ய முடியாது. இதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம் என சர்வதேசத்திற்கும் நாம் உறுதி வழங்கியுள்ளோம்.

இன்று இந்த சபையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், மாகாண சபையின் ஊடாக அரசியலுக்கு வந்தவர்கள் தான்.

இங்குள்ள யாரும் மாகாணசபை முறைமையை இல்லாது செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது.

இதனை பாதுகாக்க சட்டவாக்க சபைக்கும் நிர்வாக சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.

முன்னேற்றகரமான ஜனநாயக முறைமையின் கீழ், கேந்திரமயமாக்கப்பட்ட ஆட்சி முறைமைக்கு பதிலாக அதிகாரப் பரவலாக்கலை செய்ய வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Athavan NewsRanil Wickramasinga
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் தடை

Next Post

இம்ரான் கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

Related Posts

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
இலங்கை

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்
இலங்கை

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி
இலங்கை

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!
இலங்கை

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

2026-07-28
ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!
இலங்கை

ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு!

2026-07-28
Next Post
இம்ரான் கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

இம்ரான் கான் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

யாழில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு : சஜித் பிரேமதாஸ!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

0
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

0
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

0
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

0
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

0

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

ஊர்வலத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த துயரம்!

2026-07-28

Recent News

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2026-07-28
கடலுக்கு செல்ல வேண்டாம் – காலநிலை அவதானம்

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான எச்சரிக்கை!

2026-07-28
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ (Sisu Sariya) பேருந்து சேவை ஆரம்பம்.

2026-07-28
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.