• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/11/16
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார் என அசாத் மௌலானா சனல் 4 க்கு தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தடம் புரண்டமைக்கு அரசியல் தலையீடே காரணம் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன அவுஸ்ரேலியாவின் ABC ஊடகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ராஜபக்ச பதவியேற்றதும் அவரது தரப்பினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அந்த நேரத்தில், ஒரு பிரதமரோ அல்லது அமைச்சரவை கூட நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் தனது கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியின் சகாக்களை விசாரிக்கும் பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இதனை தான் பார்த்ததாகவும் இது மிகவும் சட்டவிரோதமானது என்றும் இந்த நடவடிக்கையால், பல அதிகாரிகள் அச்சப்பட்டதாகவும் சிலர் இனி அங்கு பணிபுரிய விரும்பாமால் இடமாற்றம் கோரியதாகவும் கூறியுள்ளார்.

சில உளவுத்துறை அதிகாரிகள் முஸ்லிம் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் அதனை கண்டுபிடித்த போது அவர்களுக்கு தடை போடப்பட்டது என்றும் இவற்றில் ஒன்று அமெரிக்க பெடரல் பீரோ ஒப் இன்வெஸ்டிகேஷன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த அன்று காலை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்றதாகவும் ஆனால் இந்த தகவலை பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை கேள்வி கேட்க முயன்றபோது, சில தடைகளை தாம் எதிர்கொண்டதாகவும் த்ற்கொலை குண்டுதாரிகளின் சகாக்களை விசாரணை செய்வதற்கு தாம் இரண்டு முறை தடுக்கப்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தொடர்பான இரகசிய விடயங்கள் என இராணுவ உளவுத்துறை தமக்கு தெரிவித்ததால், அவர்களை தாம் மேலும் விசாரிக்கவில்லை என்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியும் என்று தான் நம்பிய முந்தைய விசாரணையை இராணுவ புலனாய்வு முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், கிழக்கில் இரண்டு கான்ஸ்டபிள்களின் கொலையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பங்கை மறைத்து, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தனர் என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொலைச் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க முடிந்திருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன என்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

Next Post

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

2026-05-30
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

2026-05-30
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!
இலங்கை

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

2026-05-30
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
இலங்கை

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

2026-05-30
2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!
இலங்கை

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!
இலங்கை

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

2026-05-29
Next Post
ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

ஹெஸ்பொல்லாவை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஜேர்மன் பொலிஸ் சோதனை!

யாழில் விழிப்புணர்வுப் பேரணி!

யாழில் விழிப்புணர்வுப் பேரணி!

காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தயார் – பெஞ்சமின் நெதன்யாகு

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

0
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

0
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

0
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

0
2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

0
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

2026-05-30
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

2026-05-30
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

2026-05-30
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

2026-05-30
2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!

2026-05-29

Recent News

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

2026-05-30
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

2026-05-30
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

2026-05-30
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப்படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

2026-05-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.