• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

KP by KP
2024/01/07
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
69 0
A A
0
31
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்தை இலக்காகக்கொண்டு கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது.

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்து கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.

குறித்த மகஜர், நேற்றைய தினம் சனிக்கிழமை (06.01.24) யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளது.

குறித்த மகஜரில்,

ஜனாதிபதி அவர்களே, மிக நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், இந்த அழகிய சிறிய தீவில் வாழும் இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர, அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினரையும் ஒரு நியாயமான மற்றும் நிலையான சமாதானத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும்.

மூன்றரை தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் இனமுறுகல் மற்றும் முரண்பாடு காரணமாக பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் இன்னும் துளிர்விடவில்லை.

தற்போதுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை இந்த நாட்டில் இன முரண்பாடுகளும் அவநம்பிக்கையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

இந்த நாட்டில் நீண்டகாலமாக இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன, அரசியல் பிரச்சினைகளுக்கு நீதியான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது அவசியமானதுடன், போரினாலும் மற்றும் இன்றும் போரின் விளைவுகளாலும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நிரந்தர நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகும்.
சமூகக் கண்ணோட்டம் கொண்ட மனித நேயமுள்ள சிவில் அமைப்புகளாக நாம் இதன் மூலம் மட்டுமே இலங்கைத் தீவில் உண்மையான, நிலையான, நியாயமான அமைதியை அடைய முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வகையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தமிழ் மக்கள் மத்தியில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

தற்போதுள்ள இனப் பதற்றத்தைத் தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தீர்கள். ஆனால், தற்போது அவ்வேலைத் திட்டம் தேக்கமடைந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை தொடர்வது நல்லிணக்க முயற்சியாக தமிழ் மக்களுக்கு தங்கள் மீது வலுவான நம்பிக்கையை ஏற்படுத்த உதவும்.

வரலாறு முழுவதும், அரசியல் கைதிகள் அல்லது போர்க் கைதிகளின் விடுதலை அல்லது பரிமாற்றம் என்பது பிளவுபட்ட அல்லது போரில் இருக்கும் இரு தரப்பினரிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்கும் செயலாக இருந்து வருகின்றது.
நீக்கப்பட வேண்டியதும் சர்வதேச ரீதியில் நாட்டிற்கு அவமானத்தைத் தருவதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக நீண்டகாலமாக (15 முதல் 28 ஆண்டுகள் வரை) சிறையில் வாடும் 12 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அதே சட்டத்தின் காரணமாக 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேல் நீதிமன்றத்தில் (வழ.இல.HC/3861/2007) வழக்கை எதிர்கொண்டு ’15 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபா 25000 அபராதம்’ என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின் சட்டமா அதிபரின் மேன்முறையீட்டுக்கு அமைய மேன்முறையீட்டு நீதி மன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி செ.சத்தியலீலா ஆகியோரையும் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவித்து அவர்களது உறவினர்களுடன் சாதாரண வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

நீண்ட கால சிறைவாசம் காரணமாக இந்த தமிழ் அரசியல் கைதிகள் முதியவர்கள், நோயாளிகள், சிறையில் இளமையை இழந்தவர்கள் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு, தினம் தினம் விடியலை எதிர்பார்த்து நடை பிணங்களாக சிறையில் வாடுகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையிலும் மற்றும் இனங்களுக்கடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதை நோக்கமாககக் கொண்டும் திருமதி சத்தியலீலா உட்பட, எஞ்சிய 12 தமிழ் அரசியல் கைதிகளையும் அனைத்து வழக்குகளில் இருந்தும் குற்றச்சாட்டுகளை விலக்குவது மூலமும் அல்லது தண்டனைகளில் இருந்து பொது மன்னிப்பு வழங்குவதன் மூலமும் எந்தவித பாகுபாடும் இன்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு, துன்பப்படும் எமது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியை பிறிதொரு இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – நல்லை ஆதீனம்!

Next Post

மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

Related Posts

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!
ஆசிரியர் தெரிவு

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

2025-12-03
மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!
இலங்கை

மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

2025-12-03
தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!
இலங்கை

தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

2025-12-03
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

2025-12-03
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2025-12-03
Next Post
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு!

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு!

தமிழ்ப் பிரிவினைவாதிகள்  பிக்குகளின் ஆதரவை பெற சூழ்ச்சி!

தமிழ்ப் பிரிவினைவாதிகள் பிக்குகளின் ஆதரவை பெற சூழ்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

0
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

0
மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

0
தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

0
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

0
அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

2025-12-03
மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

2025-12-03
தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

2025-12-03
22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

2025-12-03

Recent News

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

2025-12-03
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

2025-12-03
மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

2025-12-03
தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.