போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைபொருள் கடத்தல்காரர்கள் முற்றாக ஒடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் அனைவரையும் மிகக் குறுகிய காலத்தில் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், சில குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாகவும் இதனால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.















