• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் 76-வது குடியரசு தினம் இன்று!

இந்தியாவின் 76-வது குடியரசு தினம் இன்று!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/26
in இந்தியா, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின்  76ஆவது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26 ஆம் திகதி) இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே இவ்வாறு குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 1947 ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பிரித்தானியர்களிடமிருந்து   இந்தியா சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழுவொன்று அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. அதன் பலனாக  2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இக் குடியரசு தினமானது  இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான நாளாகப் பார்க்கப்படுவதோடு  இந்த நாள், இந்திய மக்களுக்கு ஒரு தேசிய விழிப்புணர்வு தரும் நாளாகவும், தேசிய ஒற்றுமையும் பெருமையும் உணரப்படும் நாளாகவும் திகழ்கின்றது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படும் விதம் 

இந்தியக்  குடியரசு தினக் கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் டெல்லி ராஜ்பாத்தில் இராணுவ அணி வகுப்புநடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார்.

முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும்.

அத்துடன்அரச தலைவர்களுக்கு முன்னிலையில்  இந்தியர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும்  இடம்பெபெறும். இந்த நாளில் இந்தியாவின் முக்கியமான நகரான நியூ டெல்லி விழாக்கோலம் பூண்டு காணப்படும் என்றால் அது மிகையாகாது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருப்பார்கள். இந்த முறை குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய ஜனாதிபதி  பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது  ஏனைய மாநிலங்களிலும், மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறன.

 குடியரசு தினவிழா தொடர்பான  முக்கிய தகவல்கள் 

1) குடியரசு தின அணி வகுப்புக்கான தயாரிப்புகள் எல்லாம் முந்தைய ஆண்டு ஜூலை மாதமே தொடங்கிவிடும். ஒரு வருடம் முன்பு குடியரசு தின விழா அணி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்பாளராக இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்குள் அணி வகுப்பு இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த அணி வகுப்புக்காக மட்டும் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.

2. ஒவ்வொரு ஆண்டும், வேறொரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபர் குடியரசு தின அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

3. முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அடுத்த துப்பாக்கிச் சூடு 52 வினாடிகளுக்குப் பிறகு சுடப்படும். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் பீரங்கிகள் 1941 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை.

4. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு பிரத்யேகமாக ஒரு கருப்பொருள் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசுத் துறைகள் அந்த கருப்பொருளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மாநில வாகனங்களை தயார் செய்யும். இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப் பொருளுக்கான கருப்பொருள் ‘ஸ்வர்ணிம் பாரத் – விராசத் அவுர் விகாஸ்’ (தங்க இந்தியா – பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.

5. குடியரசு தின விழா நாளில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கும். ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கிஇ கர்தவ்ய பாதை வழியாக, இந்தியா கேட் வழியாக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை இந்த அணி வகுப்பு அடையும்.

6. இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர் டாக்டர் பிஆர் அம்பேத்கர். அவர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்பு வழியாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து துறைகளும் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

7. முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (இப்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றன. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,000 வீரர்களும் பங்கேற்றனர்.

8. குடியரசு தினத்தன்று, உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான துணிச்சலைக் காட்டிய குழந்தைகளை கௌரவிப்பதற்காக தேசிய துணிச்சல் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

9. இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

இந்திய குடியரசு தினம், இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் மூலம் கிடைத்த தேசிய ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் உறுதி செய்வதோடு ஒவ்வொருவரும் தனது கடமைகளை உணர்ந்து, சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒருமை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது என்பதே  நிதர்சனமான உண்மையாகும்.

 

 

 

 

Related

Tags: INDIAஇந்தியக் குடியரசு தினம்இந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்தியஸ்த சபையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

Next Post

அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது! -ஜனாதிபதி தெரிவிப்பு

Related Posts

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

2026-01-25
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
இலங்கை

சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

2026-01-25
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்
இலங்கை

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

2026-01-25
பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
இலங்கை

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

2026-01-25
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

2026-01-25
அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!
அமொிக்கா

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது எப் – 47 மிகவும் அபாயகரமான போர் விமானம்!

2026-01-25
Next Post
புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது! -ஜனாதிபதி தெரிவிப்பு

இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு

காலியில் பஸ் விபத்து-29 பயணிகள் காயம்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டம்!

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புகையிரதத் திணைக்களம் அதிரடித் தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

0
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

2026-01-25
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

2026-01-25
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

2026-01-25
மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

2026-01-25

Recent News

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

2026-01-25
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

2026-01-25
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

2026-01-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.