• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/29
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

துபாயில் நேற்றிரவு (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஒன்பதாவது முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.

போட்டியின் இறுதித் திருப்பமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கிண்ணம் மற்றும் வெற்றியாளருக்கான பதக்கங்களைப் பெற மறுத்ததால், போட்டி எந்த விளக்கமும் இல்லாமல் முடிந்தது.

போட்டியில் இந்தியாவுக்காக திலக் வர்மா 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை எடுத்தார்.

இதில் 20வது ஓவரில் ஹாரிஸ் ரவுஃபுக்கு எதிராக ஒரு முக்கியமான சிக்ஸர் அடங்கும்.

ரிங்கு சிங் ஒரு பவுண்டரியுடன் வெற்றி ஓட்டத்தை அடித்தார் – முழுப் போட்டியிலும் சிங் எதிர்கொண்ட ஒரே பந்து அதுதான்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, ஒரு கட்டத்தில் 113 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற கணக்கில் இருந்தது.

இறுதியாக 19.1 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இறுதி 39 பந்துகளில் அவர்கள் 33 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை பறிகொடுத்தமை கவலைக்குரிய விடயமாகும்.

பாகிஸ்தானுக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் (38 பந்துகளில் 57 ஓட்டங்கள்) மற்றும் ஃபகார் ஜமான் (35 பந்துகளில் 46 ஓட்டங்கள்) ஆகியோர் 84-0 என்ற வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

மூன்றாவது இடத்துக்காக துடுப்பெடுத்தாட வந்த சைம் அயூப் (14) மட்டுமே தொடக்க வீரர்களுக்குப் பின்னர் இரட்டை இலக்க ஓட்டத்தை எட்டிய மற்றொரு பாகிஸ்தான் வீரர்.

பந்து வீச்சில் இந்தியா சார்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களில் 30 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Image

சேஸிங்கில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் மோசமான தொடக்கத்திற்குப்  (அபிஷேக் சர்மாவின் மதிப்புமிக்க விக்கெட் உட்பட நான்கு ஓவர்களில் 20-3 என்ற நிலை) பின்னர், திலக் வர்மா மற்றும் சிவம் துபே (33) ஆகியோர் அணியை மீண்டும் எழ வழி அமைத்தனர்.

இதனால், இந்தியா இறுதியாக 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.

வர்மா, சஞ்சு சாம்சன் (24) உடன் 50 பந்துகளில் 57 ஓட்டங்களை சேர்த்தார்.

ஆனால் வர்மா மற்றும் துபே இடையேயான  இணைப்பாட்டம் ஆட்டத்தை மாற்றியது.

இந்த ஜோடி 40 பந்துகளில் 60  ஓட்டங்களை சேர்த்து பாகிஸ்தானின் கைகளில் இருந்த வெற்றியை தட்டிப்பறித்தது.

2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்தியாவின் இரண்டாவது டி20 ஆசியக் கிண்ண வெற்றி இதுவாகும்.

மேலும் 1984 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாக அனைத்து வடிவங்களிலும் ஒன்பதாவது வெற்றியாகும்.

1984 இல் தொடங்கிய ஆசியக் கிண்ண வரலாற்றில் இது முதல் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியாகும்.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை மோதியுள்ளன.

குழு ஆட்டத்திலும் சூப்பர் 4 போட்டியிலும் – இரண்டிலும் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

அந்த இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

மேலும், நேற்றைய இறுதிப் போட்டியிலும் நாணய சுழற்சி மேற்கொள்ளும் போதோ அல்லது ஆட்டத்தின் முடிவிலோ கைகுலுக்கல்கள் எதுவும் இல்லை.

 

அழுத்தத்தின் கீழ் வர்மாவின் மீட்பு!

இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டமிழப்புடன், அணியின் சேஸிங் மிக மோசமான தொடக்கமாக மாறியது.

ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் அபிஷேக் சர்மா ஐந்து ஓட்டங்களுக்கு பிடி கொடுத்து வெளியேறினார்.

பின்னர், அஷ்ரஃப் மீண்டும் பந்து வீசி ஷுப்மான் கில்லை 12 ஓட்டங்களுடன் பெவிலியன் அனுப்பினார்.

அதே நேரத்தில் ஷாஹீன் அப்ரிடி, அணித் தலைவர் சூர்யகுமார் யாதவை ஒரு ஓட்டத்துடன் மாத்திரம் ஆட்டமிழக்கச் செய்தார்.

யாதவின் மோசமான துடுப்பாட்டம் தொடர் முழுவதும் 72 ஓட்டங்களுடன் முடிந்தது.

அதே நேரத்தில் அபிஷேக் சர்மா தொடரில் அதிகபட்ச தனிநபர் ஓட்டமாக ஏழு இன்னிங்ஸ்களில் சராசரியாக 314 ஓட்டங்களை எடுத்தார்.

பவர்பிளேயில் இந்தியா 36-3 என்ற நிலையில் கடும் சிக்கலில் இருந்தது.

தொடர்ந்து திலக் வர்மாவும் சஞ்சு சாம்சனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸை மீண்டும் கட்டியெழுப்பினர்.

இந்த நிலையில், சாம்சன் 13 ஆவது ஓவரில் சாஹிப்சாதா ஃபர்ஹானின் பந்து வீச்சில், அப்ரார் அகமட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் மொத்தமாக 21 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுத்தார்.

இதனால் இந்தியாவுக்கு இன்னொரு இணைப்பாட்டம் தேவைப்பட்டது.

அடுத்து வந்த சிவம் டுபேயுடன் திலக் வர்மாக கைகோர்த்தாடினார்.

டுபே, ரண்டு சிக்ஸர்களையும் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார்.

திலக் வர்மா 41 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டினார்.

ஒட்டுமொத்தமாக, வர்மா மூன்று பவுண்டரிகளையும் நான்கு சிக்ஸர்களையும் அடித்தார்.

கடைசிக்கு முந்தைய ஓவரில் டுபே 22 பந்துகளில் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை ரவூஃப் வீசினார்,

அதில் வர்மா, முதல் இரண்டு பந்துகளில் எட்டு ஓட்டங்களை எடுத்தார் – அவரது நான்காவது சிக்ஸர் உட்பட.

பின்னர் ரிங்கு சிங் இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் ஒரு பவுண்டரியுடன் சேஸிங்கை முடித்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக திலக் வர்மா தெரிவானார்.

அதேநேரம், தொடரின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.

 

கைகுலுக்கல்கள் இல்லை, கிண்ணம் வழங்கல் இல்லை

இறுதிப் பந்திற்குப் பின்னர் பரிசளிப்பு விழா ஒரு மணி நேரம் தாமதமானது

பாகிஸ்தான் அணி தங்கள் தனிப்பட்ட பதக்கங்களைப் பெற்றது.

திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முறையே ஆட்ட நாயகன் மற்றும் போட்டியின் வீரர் விருதுகளைப் பெற்றனர் – ஆனால் நக்வியிடமிருந்து அல்ல.

இருப்பினும், இந்திய அணி கிண்ணத்தை பெற்றுக் கொள்ள மேடைக்கு வரவில்லை.

“பெண்களே, தாய்மார்களே, இந்திய கிரிக்கெட் அணி இன்றிரவு தங்கள் விருதுகளைப் பெறாது என்று ஆசிய கிரிக்கெட் நிர்வாகத்தால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு இத்துடன் முடிகிறது,” என்று தொகுப்பாளர் சைமன் டவுல் அறிவித்தார்.

பின்னர், நக்வியிடமிருந்து அணி கிண்ணத்தை ஏற்க மறுத்ததாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் தேவஜித் சைகியா கூறினார்.

அதற்கு பதிலாக இந்திய அணி மைதானத்தில் கொண்டாடியது மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தது – அவர்களின் பதக்கங்கள் அல்லது கிண்ணம் இல்லாமல்.

 

Image

Related

Tags: asia cupINDIAPakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

Next Post

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Related Posts

அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!
இலங்கை

அனர்த்த நிலைமைக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம்!

2025-12-01
பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
ஆசிரியர் தெரிவு

பாதுகாப்பு ஒப்பந்தங்களை புதுப்பிக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2025-12-01
காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!
இலங்கை

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

2025-12-01
மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!
இலங்கை

மீட்பு பணிகளின் போது ட்ரோன் பயன்பாட்டை நிறுத்துமாறு விமானப் படை வலியுறுத்து!

2025-12-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
Next Post
ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

விஜய்யின்  வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

0
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

0
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

0
மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு

2025-12-01

Recent News

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார் இலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் 

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு

2025-12-01
நுவரெலியா மாவட்டத்தில்  261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 261 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு

2025-12-01
வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.