• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி உறுதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய எல்லைகள் இல்லாத உலகில், எந்த நாடும் தனியாக முன்னேற முடியாது என்றும், சிறந்த இராஜதந்திர உறவுகள் இலங்கையை உலகின் உச்சத்திற்கு உயர்த்தும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாக கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டோக்கியோவில் உள்ள Reiyukai மண்டபத்தில் நேற்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில், மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஜப்பானில் வசிக்கும் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியேயோ வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகள் அல்லது நலன்களை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் எதிர்பார்த்த மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் வெற்றியை அளவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுதல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், ஊழல் மற்றும் மோசடி இல்லாத ஆட்சியை நிறுவுதல் மற்றும் அரச இயந்திரத்தை செயற்திறனுள்ளதாக்குதல் போன்ற மக்கள் எதிர்பார்க்கும் புதிய மாற்றங்களுக்கு அரசாங்கம் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க பணிகளை நிறைவேற்றியுள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வெளியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்திற்குள் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படும் இலங்கையில் முதலீடு செய்து, நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்காளராகுமாறு ஜப்பானில் வாழும் இலங்கையரிடம் இதன் போது கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.

ஜப்பானில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே உரையாற்றிய ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்திற்கு நீங்கள் பல்வேறு வழிகளில் ஆதரவளித்துள்ளீர்கள்.

செப்டம்பர் 21 ஆம் திகதி ஏற்பட்ட அந்த அரசியல் திருப்பத்தில் நீங்கள் பங்கேற்பாளராகவும் பங்குதாரர்களாகவும் மாறிவிட்டீர்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இப்போது ஒரு வருடம் நிறைவடைகிறது.

இந்த ஒரு வருட காலத்தை எந்த அளவுகோலால் அளவிட வேண்டும்? கடந்த ஆண்டு நல்லதா கெட்டதா என்பதை, நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் அளவிட வேண்டும்.

அவ்வாறின்றி, நாங்கள் ஆட்சி அமைத்தபோது வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தவர்களின் கருத்துகளின் அடிப்படையில் அல்ல.

அன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்க எந்த நோக்கத்திற்காக ஆதரித்தீர்கள்?

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களான நீங்களோ அல்லது எங்கள் அரசாங்கத்தை உருவாக்க பங்களித்த இலங்கையில் உள்ள எவருமோ தனிப்பட்ட ரீதியில் எதையும் சம்பாதிக்கும் நோக்கிலோ, சலுகை பெற வேண்டுமென்றோ தனிப்பட்ட முறையில் ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்துடனோ செயல்படவில்லை.

எனவே, நீங்கள் அனைவரும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பால் சென்று ஒரு நாடாக, ஒரு தேசமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் விருப்பத்துடன் மட்டுமே பங்களித்தீர்கள்.

ஏற்கனவே இருந்த பாதைக்கு பதிலாக ஒரு புதிய பாதையை உருவாக்கும் நோக்கத்துடன் நீங்கள் செயல்பட்டீர்கள்.

முதலில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியிருந்தது.

இன்று, நாட்டின் பொருளாதாரத்தை நாம் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்தீரப்படுத்தியுள்ளோம்.

ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோன்று, சட்டத்தின் ஆட்சியை நீங்கள் எதிர்பார்த்தீர்கள்.

ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும் இருக்கும் காரணி என்னவென்றால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நாங்கள் காண்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

ஆனால் சட்டத்தை அணுகக்கூடியவர்களும் அணுக முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பது எங்கள் கருத்தாக இருந்தது.

அதிகாரத்தாலும் செல்வத்தாலும் இந்த நிலை உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்று, சட்டத்தை அணுக முடியாத யாரும் நம் இலங்கையில் வசிக்கவில்லை.

நாட்டைக் கட்டியெழுப்புவதில், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் மோசடி மற்றும் ஊழலைக் குறைத்தல் மற்றும் திறமையான அரச பொறிமுறை என்பன அவசியம்.

இன்று, இலங்கையில் 76 ஆண்டுகால அரசியல் அதிகாரத்திற்குப் பிறகு, பொதுமக்களின் பணம் திருடவோ அல்லது வீணாக்கவோ செய்யாத ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

ஏனெனில், அரச பொறிமுறையானது இந்த பழைய பழக்கங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும்.

அதை மாற்றுவதற்கான முதல் படியை நாங்கள் எடுத்துள்ளோம்.

சிறந்த அரச சேவையை உருவாக்க தேவையான அடிப்படை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.

வலுவான இராஜதந்திர உறவுகளை உருவாக்குவதும் மிக முக்கியம்.

உலகில் எந்த நாடும் இனி தனிமையில் வாழ முடியாது.

பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளால் நாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளோம்.

எனவே, தேசிய எல்லைகள் இருந்தாலும், பொருளாதாரத்தில் இனி தேசிய எல்லைகள் கிடையாது.

சந்தையில் தேசிய எல்லைகள் இல்லை.

அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஒரு அரசு முன்னேற, வலுவான, நிலையான மற்றும் தெளிவான வெளிநாட்டு உறவுகள் அவசியம்.

கடந்த ஆண்டில், நமது இராஜதந்திர உறவுகளில் பராமரிக்கப்பட வேண்டிய சமநிலையை எம்மால் குறிப்பிடத்தக்க அளவில் பராமரிக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.

இந்த அடிப்படைகளை நிறுவாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

மேலும், வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் மதங்கள் நம் நாட்டில் வாழ்கின்றன.

அவர்களுக்கு அவற்றின் தனித்துவமான கலாச்சாரங்கள் உள்ளன. எனவே, நமது நாடு பல்வேறு மக்கள் நிறைந்த நாடு.

நமது நாட்டை முன்னோக்கி நகர்த்த, இந்த மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

ஆனால் நீண்டகால அரசியல் போராட்டத்தின் காரணமாக, இந்த மக்கள் பல்வேறு இன மோதல்கள் மற்றும் மத மோதல்களை உருவாக்குவதன் மூலம் ஒருவருக்கொருவர் அந்நியப்படுத்தப்பட்டனர்.

புவிசார் அரசியல் இயக்கம் அத்தகைய இன ஆதாரங்கள் மற்றும் சித்தாந்தங்களுடன் கட்டமைக்கப்பட்டது.

எனவே, மோதல்கள் நிறைந்த ஒரு நாடு, ஒருவருக்கொருவர் பிரிவினையையும் வெறுப்பையும் விதைக்கும் ஒரு நாடு முன்னேற முடியாது.

எனவே, நம் நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை, மொழி வேறுபாடுகள் மற்றும் மத வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒருமித்த கருத்தைக் கொண்ட ஒரு அரசை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் எந்த இன மோதல்களும் அதிகரிக்காத ஆண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் மேலும் முன்னேற வேண்டும்.

ஒரு வலுவான கட்டிடத்தை கட்டியெழுப்ப, நமக்கு மிகவும் வலுவான அடித்தளம் தேவை.

ஆனால் நம் நாடு அடித்தளம் உடைந்த ஒரு நாடு. இன்று நாம் அந்த அடித்தளத்தை அமைத்துவிட்டோம்.

கடந்த ஆண்டு நமது நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்ப தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்த ஆண்டு.

இப்போது நாம் இந்த அடித்தளத்தின் மீது கட்டிடங்களை கட்டத் தொடங்க வேண்டும்.

இந்த அடித்தளத்தில் நாட்டை கட்டியெழுப்பும்போது, ​​அரசாங்கத்திற்கு சவால்கள் உள்ளன.

நாட்டிற்கு ஒரு சவால் உள்ளது.

மக்களுக்கும் ஒரு சவால் உள்ளது.

அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால் வருவாயை ஈட்டுவதாகும்.

நாடு எதிர்கொள்ளும் சவால் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை ஈட்டுவதாகும்.

மேலும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் அவசியம்.

எனவே, அரசாங்கம் வருவாயை ஈட்ட வேண்டும்.

இலங்கையில் முதல் முறையாக, வரவு செலவுத் திடத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருவாயை விட இந்த ஆண்டு அதிக வருவாயை ஈட்ட முடிந்தது.

அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து வருவாயை ஈட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் ஒரு வெளியில் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

அந்த வெளிப் பொருளாதாரத்தை தயார் செய்வதற்கு தேவையான சட்ட ஆதரவு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் வகிபாகமாகும்.

வெளிப் பொருளாதாரம் வளரும்போது, ​​வரி விகிதம் குறைந்து மக்கள் நிவாரணம் பெறுவர்.

அதன்படி, இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தாதிருக்க எதிர்பார்க்கிறோம்.

எதிர்காலத்தில் சில வரி விகிதங்களை குறைப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

இவ்வாறு எங்களிடம் பொருளாதாரத் திட்டங்கள் உள்ளன.

அதற்காக, வெளியிலே பாரிய பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும்.

அதில், சுற்றுலாத் துறையில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

2030 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 8 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருளாதாரமாக மாற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதற்காக, வர்த்தகர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கி வருவதோடு சுற்றுலாத் துறைக்குத் தேவையான சூழலை உருவாக்குகிறது.

மேலும், இலங்கையின் பிம்பத்தை மேம்படுத்துவது இந்த விடயத்தில் முக்கியமானது.

இலங்கை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

மேலும், நாடு தற்போது தேவையான முதலீடுகளைப் பெற்று வருகிறது.

நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

அதேபோன்று, தனியார் துறை பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். அரசாங்கத்திடம் அதிக எண்ணிக்கையிலான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

பெயர் இருந்தபோதிலும், அவை அந்த நிலத்திற்கு ஏற்ப வருமானத்தை ஈட்டுவதில்லை.

எனவே, மிகவும் மதிப்புமிக்க எமது வளமான நிலத்தை மிகச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும்.

எனவே, தோட்டங்களை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பலனற்ற அனைத்து நிலங்களையும் வழங்குமாறு நாங்கள் அறிவித்துள்ளோம்.

அவற்றில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறோம்.

உங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் பணியாகும்.

மேலும், தொழில்வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று, அந்த பொறுப்பை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

எனவே, சில ஆண்டுகள் கடினமாக உழைத்தால், நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமையை பொருளாதார ரீதியாக நாம் போக்க முடியும்.

மேலும், அரச சேவையை செயற்திறனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கலை அதன் முக்கிய அங்கமாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கலும் ஒன்லைனில் செலுத்தப்படும்.

மேலும், கேள்வி மனுக்கல், மற்றும் சுங்கப் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். அதை வெற்றிகரமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது நாட்டின் சட்டங்களை இயற்றியவர்களே அந்தச் சட்டங்களுக்கு மாறாகச் செயல்பட்டுள்ளனர்.

சட்டம் இருந்தாலும், அது செயல்படுத்தப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

சட்டம் மட்டும் போதுமானதல்ல. அது செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்று, 40 கட்சிகள் ஒரே அறையில் கூடும் அளவுக்கு அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பிரஜைகள், சட்டத்திற்கு பயப்பட வேண்டும்.

அந்த கலாச்சாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.

மேலும், தேசிய பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே மேலும் மோதல்கள் இல்லாத வகையில் நாட்டை ஆளுவதே எங்கள் அணுகுமுறையாகும்.

வடக்கின் மக்கள் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

இனிமேல் போர் இல்லாத வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேசிய ஒற்றுமையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி மற்றும் சட்டப் பாதுகாப்பு வழங்கி சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் உள்ள ஒரு நாட்டையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

நமது குழந்தைகளை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றவும் நாங்கள் பாடுபடுகிறோம்.

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.

இன்று, இவற்றைக் கட்டுப்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம்.

போதைப்பொருள் மற்றும் குற்றங்களின் இந்த மறைவான அரசை மூட முடிவு செய்துள்ளோம்.

மேலும், இந்த பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும்.

நாம் மேல்மட்டத்தில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சியைக் காட்டினாலும், மக்களின் வாழ்க்கை மாறவில்லை என்றால், அது பலனளிக்காது.

மக்களின் வாழ்க்கையை எப்போதும் ‘அஸ்வெசும’வுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது.

அவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

எனவே, விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.

கிராமங்களுக்கு பொருளாதாரத்தையும் விரிவுபடுத்த வேண்டும்.

அதற்குத் தேவையான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் நமது நாட்டு மக்கள் ஒரு புதிய மாற்றத்தை, ஒரு புதிய பயணத்தை விரும்பியிருந்தால், அந்த புதிய மாற்றத்திற்கும் புதிய பயணத்திற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம்.

அந்தப் பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உங்களிடமிருந்து ஒரு கிண்ணம் நீர் கூட எங்களுக்கு வேண்டாம். நாட்டிற்கு முதலீடுகளைக் கொண்டு வாருங்கள்.

மேலும், வெளிநாட்டில் பணிபுரியும் போது நீங்கள் பெற்ற அனுபவங்களை எங்கள் நாட்டிற்கு கொண்டு வாருங்கள்.

அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் தயார் செய்து தருகிறோம்.

அதன்படி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பயணத்தின் ஒரு பகுதியாக மாற உங்களுக்கு வாய்ப்பு உள்ளது” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related

Tags: anura kumara dissanayakeJapanPresidentஅநுர குமார திசாநாயக்கஜப்பான்ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

2026-01-25
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!
இலங்கை

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!
இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!
இலங்கை

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24
இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!
இலங்கை

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

2026-01-24
Next Post
பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

பாகிஸ்தானை வீழ்த்தி 9 ஆவது முறையாகவும் ஆசியக் கிண்ணத்த‍ை வென்ற இந்தியா!

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆயுதங்கள், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

விஜய்யின்  வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

0
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

0
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

0
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

2026-01-25
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

2026-01-24

Recent News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்

2026-01-25
ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

2026-01-24
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30!

2026-01-24
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

2026-01-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.