பெண் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இத்தாலியின் கீழ்சபை செவ்வாய்க்கிழமை (25) மாலை ஒருமனதாக அங்கீகரித்தது.
ஒரு அடையாள நடவடிக்கையாக, உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளில் இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டது.
அரசாங்கத்தால் வரையப்பட்ட இந்த சட்டமூலம், கட்சிகளுக்கு இடையேயான ஆதரவைப் பெற்றது.
ஏற்கனவே ஜூலை மாதம் செனட்டால் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நாட்டின் ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட பின்னர் அது சட்டமாக மாறும்.
இந்த சட்டமூலம் இத்தாலியின் குற்றவியல் சட்டத்தில் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.
இது ஒரு பெண்ணை வெறுப்பு, பாகுபாடு, துஷ்பிரயோகம் அல்லது கட்டுப்பாட்டின் செயலாகக் உயிரிழக்க வழி செய்யும், அவளுடைய சுதந்திரத்தை கடுப்பாடுத்துவது தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்கிறது.














