உத்தியோக பூர்வ விஜயமாக 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை 9.40 மணக்கு டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
முதலில் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டிற்கு செல்லவுள்ளார்.
ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இந்தியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அவர் நாளையதினம் (16) எத்தியோப்பியாவிற்கு செல்லவுள்ளார்.
இந்த பயணம் முடிவடைந்த பின்னர் , டிசம்பர் 17ம் திகதி ஓமன் நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
இந்தியாவும் ஓமனும் பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே உறவை கொண்டுள்ளது.
இது தொடர்பாகவும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.















