2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,500 பொலிஸ் அதிகாரிகளும் 600 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் பின்வரும் வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, ரசிகர்கள் பெரிய பயணப் பைகள், கண்ணாடி போத்தல்கள், ட்ரோன்கள், கூர்மையான பொருட்கள், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை மைதான வளாகத்திற்குள் கொண்டு வரவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிவில் உடையில் உள்ள அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.
இலங்கையில் நடைபெறும் பேட்டிகள் கொழும்பு, பிரேமதாச மைதானத்திலும், எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












