ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (13) நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியானது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்து.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களை பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்களையும், தடிவனாஷே மருமணி (Tadiwanashe Marumani) மற்றும் ரியான் பர்ல் (Ryan Burl) ஆகியோர் தலா 35 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் மாட் ரென்ஷா (Matt Renshaw) அதிகபடியாக 44 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார்.
சிம்பாப்வே சார்பில் பந்து வீச்சில் முசரபானி 4 விக்கெட்டுகளையும், பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக முசரபானி தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.














