பண்டாரவளை, மாபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, இருவர் பாரிய கற்பாறைகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பகுதியில் கல் உடைப்பதற்காக வெடிவைத்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட பாறைச் சரிவு காரணமாகவே அங்கு நின்றிருந்த இருவரும் பாறைகளுக்கு இடையில் சிக்குண்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாறைகள் சரிந்துள்ளமையால் அவர்களை மீட்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தீவிரமான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.














