சிகிரியா-பிதுரங்கல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணைகளில் பாதிக்கப்பட்டவரும் அவரது மனைவியும் சிகிரியா-பிதுரங்கல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













