கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெப்ரவரி 14 ஆம் திகதி ஜிந்துபிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.













