இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நிலையில் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
எவ்வாறாயினும், கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழை காரணமாகப் போட்டியைக் கைவிட ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
இதற்கமைய, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் வழங்கப்பட்டமை குறிபிடத்தக்கது
















